Friday, December 28, 2012

2012இல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்வித் திண்டாட்டம்

கல்வி, பட்டங்கள், மதிப்பு, மனநிறைவான வாழ்கை இவற்றை விருப்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சீரான கல்வி ஒன்று கிடைக்கப்பெறுமாயின் சிறப்பான வாழ்க்கைக்கு ஏற்றவை அனைத்து இயல்பாக கற்றோர் பின்வந்துவிடும். யாழ்ப்பாண வரலாற்றில் கல்விக்கென தனியிடம் உண்டு. யாழ்ப்பாண மக்களின் பிரதான மூலதனம் கல்வி என்றால் மிகையாகாது. இந்த அழிவில்லாத மூலதனத்தைப் பெற யாழ். மாணவர்கள் அன்றும் இன்றும் போராட வேண்டியுள்ளது. 


இலங்கையின் உயர்கல்வி வரலாற்றில் 2012ஆம் ஆண்டு சோதனை மிக்க ஆண்டாகவே பதியப்படுகிறது. கல்விப் பொதுத்தரா உயர்தரம் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இவ்வாண்டில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதேபோல் இலங்கையின் உயர்கல்வி குறித்து நம்பிக்கையின்மையை ஏற்படுத்திய ஆண்டாகவும் இவ்வாண்டு விழங்குகிறது.

Wednesday, December 5, 2012

நீயா ? நானா ? போட்டியில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சங்க ஒழுங்கை!

கொழும்பு வெள்ளவத்தை ருத்ரா மாவத்தை, 57வது ஒழுங்கையில் கொழும்பு தமிழ் சங்கம் உள்ளது. மன்னர்கள், புலவர்கள் காலத்திலே சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டதால் "தமிழ் சங்கம்" என்ற வார்த்தைக்கு ஒரு புனிதத் தன்மை உண்டு. அந்த புனிதத்தை உணர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் வேலணை வேணியன் கொழும்பில் அது அமைந்துள்ள 57வது ஒழுங்கையை தமிழ் சங்க ஒழுங்கை என பெயர் மாற்றம் செய்ய யோசனை முன்வைத்தார். இந்த யோசனை கைகூடி வந்தவேளை பேரினவாத சதிகாரர்களால் அதற்கு முட்டுக்கட்டை இடப்பட்டுள்ளது.


இந்த முட்டுக்கட்டையை உடைத்தெறிய ஜனாநாயக மக்கள் முன்னணி கட்சி, மேல் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட சிங்கள தரப்பை அழைத்து பேச்சுவார்த்தை செய்ய முடிவு செய்தது. இந்த பேச்சுவார்த்தைக்கான ஒழுங்குகள் செய்யப்படுகிறன்ற நிலையில் புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.

Wednesday, October 10, 2012

தமிழர்களை தொடர்ந்தும் சின்னாபின்னமாக்கும் இலங்கை அரசு!


மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து மூன்று வருடங்கள் கடந்து விட்டன. இந்நிலையில் இடம்பெயர்ந்த பெருந்திரளான மக்கள் அனைவரையும் மீள்குடியமர்த்தி விட்டதாக அரசு உலகிற்கு பெருமை பேசிக் கொண்டிடுக்கிறது. இலங்கையில் மீள்குடியேற்றம் நூற்றுக்கு ஐம்பது வீதமான அளவிற்கு கூட பூர்த்தி செய்யப்படவில்லை என்பது வெளிப்படையாக பாக்குமிடத்தே தெரிகிறது.
 



பாதுகாப்பு, சுகாதாரம், உணவு, வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களிற்கு பாதிப்பு எற்படும் இடத்து இடப்பெயர்வு ஏற்படுகிறது. எனினும் இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரையில் உள்நாட்டு, வெளிநாட்டு இடப்பெயர்வுக்கு யுத்தம் ஒன்றே காரணமாக விளங்கியது. நிலையான ஒரு பாதுகாப்பு இடமின்றி, நிம்மதியின்றி, நித்திரையின்றி, வருட, மாத இடைவெளிகளில் இடப்பெயர்வை சந்தித்தவர்கள் வடக்கைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள்.

Tuesday, October 2, 2012

சரித்திடம் படைக்கத் துடிக்கும் மொட்டுக்களை கருக்காதீர்கள்!

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இன்று சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினம் என்பது யாவரும் அறிந்த ஒன்று. எனினும் இவ் வயதினருக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி பலர் கருத்திற் கொள்வதில்லை. முக்கிய பெரும் சொத்துக்களின் தினமாக இன்றைய நாள் அமையப் பெற்றிருக்கிறது. இருப்பினும் இன்றைய சிறுவர்கள் எதிர்கால தலைவர்கள். எனவே சிறுவர்கள், அவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் குறித்து இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் பேசலாம். 



ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் நிறைவான மனிதன் எனும் கட்டிடத்தின் அஸ்திவாரமாக அவனது இளமைக்காலம் அமைகிறது. அந்தக் காலத்தில் அவன் பெறும் கல்வி, அனுபவம், சிந்தனைகள் எல்லாம் எதிர்கால அறுவடைக்காய் விதைக்கப் பெற்ற நாற்றுக்கள்.

Wednesday, July 4, 2012

கைக் குழந்தையையும் காமத்துடன் பார்க்கும் அரக்கர்கள்: கருவறையில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு!

இலங்கை மக்களிடத்தில் மனிதம் மரணித்து விட்டது என புலம்பத்தான் முடிகிறது. நிகழ்கால நிதர்சனங்கள் அப்படி இருக்கிறது. அன்பு, பாசம், ஒற்றுமை, சகோதரத்துவம் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அந்த கோர சம்பவம் பதிவாகியிருக்காது.

கூட்டுக் குடும்பம் சிதறி, தனித் தனி குடும்பங்கள் உருவாகி இன்று உருக்குலைந்து போகின்றன. சிறுவர்களை வழிநடத்தக் கூடிய முதியவர்கள் அவர்களுடன் இல்லை. தாய் தந்தை இருவரும் பொருளாதாரத்தை கவனிப்பதை தமது நேரத்தை செலவளிக்கின்றனர்.



பிள்ளைகளது சிந்தனைகள் எப்படி இருக்கின்றன அவர்கள் போகும் வழி சரியானதா ? தவறானதா ? என்று அவதானிக்க கூட பெற்றோர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. தனிமையும் தீய பழக்கவழக்கங்களாலும் பிள்ளைகள் செய்யும் செயல்கள் எல்லை மீறிப் போகவே பெற்றோர்கள் கலங்குகின்றனர்.

Tuesday, May 22, 2012

புகுந்த வீட்டிற்கு அனுப்பவேண்டிய மகளை சுடுகாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்


அன்பு, பாசம், ஒழுக்கம், முயற்சி, நன்மை, தீமை என உலக வாழ்வின் அனைத்து அடிப்படை விடயங்ளையும் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் முதல் ஆசான்களாக பெற்றோர்கள் இருக்கவேண்டும். அது பெற்றோர்களின் கடமையும் கூட. சிலர் அவ்வாறு வாழ்கிறார்கள். சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சரியான வழியில் வழிநடத்த தவறுகின்றனர்.


பிள்ளைகள் சிலரின் தவறான முடிவுகளிற்கு அல்லது பிள்ளைகள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தூண்டுதல்களாக, காரணியாக பெற்றோர்களே இருப்பது கசப்பான உண்மையும் கூட. பெற்றோர்களின் தவறான செயற்பாடுகளால் பிள்ளைகளின் வாழ்க்கை, எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

Saturday, April 21, 2012

வெளிநாடுகளில் நம்மவர்களின் தில்லு முள்ளுகள்

உலகின் எல்லா மூலைகளிலும் தன் பெயரை பதித்துள்ள இலங்கைத் தமிழன் தன் தனித்துவத்தையும் பதிக்காமல் இல்லை. கல்விக்குப் பெயர்போன யாழ் மண், யாழ்ப்பாணத்தான் இப்போது தனது பெயரை விசித்திரமாக பல சாதனைகளை புரிந்து பதித்துள்ளான். 


தழிழன் என்றொரு இனம் உண்டு. அதற்கு தனிச் சிறப்புண்டு என்று தமிழர்களை போற்றி தலையில் துக்கி வைத்துள்ளது இந்த உலகம். நல்ல செயல்களால் தன்னை அலங்கரித்துக் கொண்ட தமிழன், இப்போது உலகில் உள்ள கள்ள வேலைகள் அனைத்தையும் செய்து தன் இனத்தின் தனித்துவத்தை விற்று வருகிறான். 


வெளிநாடு சென்றுள்ள நம்மவர்கள் ஒருசிலர் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அங்கு நேர்மையாக முன்னுக்கு வரும் இளைஞர்கள் மத்தியில் பலர் பல்வேறுபட்ட பிழையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை மறுக்கமுடியாது. இவ்வளவு பில்டப்பையும் பாத்து கொடூரமா பதிவை வாசிச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல..............

Sunday, April 8, 2012

கொழும்பு பஸ்களில் ஆண்களின் அட்டகாசங்கள்


இலங்கையின் வியாபார நகரமாகிய கொழும்பில் வசிக்கும் பெரும்பாலானவர்களின் போக்குவரத்து சாதனம் பஸ்தான். 

இந்த பஸ்களில் பெண்கள் பிரயாணஞ் செய்வதென்றால் அப்பப்பா...... ஒரு நரக லோகம் தான். காலையிலும் மாலையிலும் வேலைக்கு போய்வரும் பெண்கள், பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகள் பஸ் பிரயாணத்தில் படும் பாடு கொஞ்ச நெஞ்சம் இல்லை.

காலையில் எழும்பி உற்சாகத்தோட வேலைக்கோ பாடசாலைக்கோ வெளிக்கிட்டு ஓடிப் போய் பஸ்ஸ பிடிச்சு ஒரு மாதிரி ஏறினா, அதில் வரும் அன்புச் சகோதரர்கள் இருக்கினம் பாருங்கோ நாய மாதிரி நாக்கில வீணீர் வடிய வடிய ஒரு பார்வை பாப்பினம்.



அதோட விடுவினமா சாரதி பிறேக் போட்டா என்ன போடாட்டி என்ன ஒரு ஆட்டம் ஆடுவினம். பிறகு எப்படா பாதசாரதிகள் கடவை வரும் சட்டெண சாரதி பிறேக் பிடிப்பார் என்று பாத்துக் கொண்டு இருப்பார்கள்.

Tuesday, March 13, 2012

காரைநகரானின் திருமணத்தில் கோடிகள் படும் பாடு

யாழ் மாவட்டத்தின் தென்மேற்குத் திசையில் ஏழு தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சப்த தீவுகள் என கூறுவர். காரைநகர், வேலணை, புங்குடுதீவு, நெடுந்தீவு, அனலைதீவு, எழுவை தீவு, மண்டை தீவு என்பனவே இந்த சப்த தீவுகள். ஏனைய தீவுகளை விடவும் யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இருப்பது காரைநகர் ஆகும். காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடைய தீவு.



இங்கு அதிகமான காரைச் செடிகள் இருந்தமையின் காரணமாக காரைநககர் என பெயர் வந்ததாக கூறுவர். காரைநகர் வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகளைக் கொண்டுள்ளது.

Sunday, January 29, 2012

ஊடகத்துறையில் நிலைக்க முக்கியமாக தெரிந்திருக்க வேண்டிய தாரக மந்திரம்!



இலக்கியங்களை காலத்தின் கண்ணாடிகள் என கூறுவர். அந்த இலக்கியங்களையும் வெளியுலகத்திற்கு கொண்டு வருவதற்கு ஊடகங்கள் இன்றியமையாதவை. சமூகத்தின் மத்தியில் ஊடகங்களின் தாக்கம் மிக அதிகம்.

ஏன் இன்றைய காலத்தில் தனி மனித வாழ்க்கையிலும் ஊடகங்கள் நிமிடத்திற்கு நிமிடம் தாக்கம் விளைவித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

பத்திரிக்கை, வானொலி. தொலைக்காட்சி என்றிருந்த ஊடகங்கள் இன்று இணைய ஆக்கிரமிப்பின் மூலம் இளைஞர்களிடத்தில் மிக நெருங்கி விட்டன. ஊடகங்களில் பணியாற்ற வேண்டும் என பல இளைஞர் யுவதிகளுக்கு ஆர்வம் அதிகம்.