கல்வி, பட்டங்கள், மதிப்பு, மனநிறைவான வாழ்கை இவற்றை
விருப்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சீரான கல்வி ஒன்று கிடைக்கப்பெறுமாயின் சிறப்பான வாழ்க்கைக்கு ஏற்றவை அனைத்து இயல்பாக கற்றோர் பின்வந்துவிடும். யாழ்ப்பாண வரலாற்றில் கல்விக்கென
தனியிடம் உண்டு. யாழ்ப்பாண மக்களின் பிரதான மூலதனம் கல்வி என்றால் மிகையாகாது.
இந்த அழிவில்லாத மூலதனத்தைப் பெற யாழ். மாணவர்கள் அன்றும் இன்றும் போராட வேண்டியுள்ளது.
இலங்கையின் உயர்கல்வி
வரலாற்றில் 2012ஆம் ஆண்டு சோதனை மிக்க ஆண்டாகவே பதியப்படுகிறது. கல்விப் பொதுத்தரா
உயர்தரம் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இவ்வாண்டில் மாணவர்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டனர். அதேபோல் இலங்கையின் உயர்கல்வி குறித்து நம்பிக்கையின்மையை
ஏற்படுத்திய ஆண்டாகவும் இவ்வாண்டு விழங்குகிறது.