Showing posts with label மக்கள். Show all posts
Showing posts with label மக்கள். Show all posts

Wednesday, December 5, 2012

நீயா ? நானா ? போட்டியில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சங்க ஒழுங்கை!

கொழும்பு வெள்ளவத்தை ருத்ரா மாவத்தை, 57வது ஒழுங்கையில் கொழும்பு தமிழ் சங்கம் உள்ளது. மன்னர்கள், புலவர்கள் காலத்திலே சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டதால் "தமிழ் சங்கம்" என்ற வார்த்தைக்கு ஒரு புனிதத் தன்மை உண்டு. அந்த புனிதத்தை உணர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் வேலணை வேணியன் கொழும்பில் அது அமைந்துள்ள 57வது ஒழுங்கையை தமிழ் சங்க ஒழுங்கை என பெயர் மாற்றம் செய்ய யோசனை முன்வைத்தார். இந்த யோசனை கைகூடி வந்தவேளை பேரினவாத சதிகாரர்களால் அதற்கு முட்டுக்கட்டை இடப்பட்டுள்ளது.


இந்த முட்டுக்கட்டையை உடைத்தெறிய ஜனாநாயக மக்கள் முன்னணி கட்சி, மேல் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட சிங்கள தரப்பை அழைத்து பேச்சுவார்த்தை செய்ய முடிவு செய்தது. இந்த பேச்சுவார்த்தைக்கான ஒழுங்குகள் செய்யப்படுகிறன்ற நிலையில் புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.

Wednesday, October 10, 2012

தமிழர்களை தொடர்ந்தும் சின்னாபின்னமாக்கும் இலங்கை அரசு!


மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து மூன்று வருடங்கள் கடந்து விட்டன. இந்நிலையில் இடம்பெயர்ந்த பெருந்திரளான மக்கள் அனைவரையும் மீள்குடியமர்த்தி விட்டதாக அரசு உலகிற்கு பெருமை பேசிக் கொண்டிடுக்கிறது. இலங்கையில் மீள்குடியேற்றம் நூற்றுக்கு ஐம்பது வீதமான அளவிற்கு கூட பூர்த்தி செய்யப்படவில்லை என்பது வெளிப்படையாக பாக்குமிடத்தே தெரிகிறது.
 



பாதுகாப்பு, சுகாதாரம், உணவு, வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களிற்கு பாதிப்பு எற்படும் இடத்து இடப்பெயர்வு ஏற்படுகிறது. எனினும் இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரையில் உள்நாட்டு, வெளிநாட்டு இடப்பெயர்வுக்கு யுத்தம் ஒன்றே காரணமாக விளங்கியது. நிலையான ஒரு பாதுகாப்பு இடமின்றி, நிம்மதியின்றி, நித்திரையின்றி, வருட, மாத இடைவெளிகளில் இடப்பெயர்வை சந்தித்தவர்கள் வடக்கைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள்.