Wednesday, July 4, 2012

கைக் குழந்தையையும் காமத்துடன் பார்க்கும் அரக்கர்கள்: கருவறையில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு!

இலங்கை மக்களிடத்தில் மனிதம் மரணித்து விட்டது என புலம்பத்தான் முடிகிறது. நிகழ்கால நிதர்சனங்கள் அப்படி இருக்கிறது. அன்பு, பாசம், ஒற்றுமை, சகோதரத்துவம் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அந்த கோர சம்பவம் பதிவாகியிருக்காது.

கூட்டுக் குடும்பம் சிதறி, தனித் தனி குடும்பங்கள் உருவாகி இன்று உருக்குலைந்து போகின்றன. சிறுவர்களை வழிநடத்தக் கூடிய முதியவர்கள் அவர்களுடன் இல்லை. தாய் தந்தை இருவரும் பொருளாதாரத்தை கவனிப்பதை தமது நேரத்தை செலவளிக்கின்றனர்.



பிள்ளைகளது சிந்தனைகள் எப்படி இருக்கின்றன அவர்கள் போகும் வழி சரியானதா ? தவறானதா ? என்று அவதானிக்க கூட பெற்றோர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. தனிமையும் தீய பழக்கவழக்கங்களாலும் பிள்ளைகள் செய்யும் செயல்கள் எல்லை மீறிப் போகவே பெற்றோர்கள் கலங்குகின்றனர்.