இலக்கியங்களை காலத்தின் கண்ணாடிகள் என கூறுவர். அந்த இலக்கியங்களையும் வெளியுலகத்திற்கு கொண்டு வருவதற்கு ஊடகங்கள் இன்றியமையாதவை. சமூகத்தின் மத்தியில் ஊடகங்களின் தாக்கம் மிக அதிகம்.
ஏன் இன்றைய காலத்தில் தனி மனித வாழ்க்கையிலும் ஊடகங்கள் நிமிடத்திற்கு நிமிடம் தாக்கம் விளைவித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
பத்திரிக்கை, வானொலி. தொலைக்காட்சி என்றிருந்த ஊடகங்கள் இன்று இணைய ஆக்கிரமிப்பின் மூலம் இளைஞர்களிடத்தில் மிக நெருங்கி விட்டன. ஊடகங்களில் பணியாற்ற வேண்டும் என பல இளைஞர் யுவதிகளுக்கு ஆர்வம் அதிகம்.