மூன்று
தசாப்தகாலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து
மூன்று வருடங்கள் கடந்து விட்டன. இந்நிலையில் இடம்பெயர்ந்த பெருந்திரளான மக்கள் அனைவரையும்
மீள்குடியமர்த்தி விட்டதாக அரசு உலகிற்கு பெருமை பேசிக் கொண்டிடுக்கிறது. இலங்கையில்
மீள்குடியேற்றம் நூற்றுக்கு ஐம்பது வீதமான அளவிற்கு கூட பூர்த்தி செய்யப்படவில்லை
என்பது வெளிப்படையாக பாக்குமிடத்தே தெரிகிறது.
பாதுகாப்பு,
சுகாதாரம், உணவு, வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை
அம்சங்களிற்கு பாதிப்பு எற்படும் இடத்து இடப்பெயர்வு
ஏற்படுகிறது. எனினும் இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரையில் உள்நாட்டு, வெளிநாட்டு இடப்பெயர்வுக்கு யுத்தம்
ஒன்றே காரணமாக
விளங்கியது. நிலையான ஒரு பாதுகாப்பு இடமின்றி, நிம்மதியின்றி, நித்திரையின்றி, வருட, மாத இடைவெளிகளில் இடப்பெயர்வை
சந்தித்தவர்கள் வடக்கைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள்.