Wednesday, January 16, 2013

ரிஸானாவின் மரணதண்டனையில் சாதித்தது என்ன ?


"ரிஸானா நபீக்" இன்றுடன் ஒரு கிழமையாக அனைவர் வாயிலும் உச்சரிக்கும் ஒரு நாமமாக மாறிவிட்டது. ரிஸானா அவள் எம்மைவிட்டு மறைந்தாளும் அவளது இழப்புக் குறித்த பேச்சுக்கள் இப்போதைக்கு மறையப் போவதில்லை. ரிஸானாவிற்கான தண்டனை குறித்து பெருமைகொள்ளும் ஒரு கூட்டமும், கண்டனங்களை தெரிவிக்கும் மற்றுமொரு கூட்டமும் இன்றும் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கின்றன.


இதுரை நான், எந்தவொரு மதம் குறித்தோ சமூகம், இனம் குறித்து பேசியதோ, முக்கியத்துவம் கொடுத்தோ இல்லை.  ஆனாலும் ரிஸானாவின் படுகொலை, அவளது முயற்சி மரணித்தமை என்னை கண்கலங்க வைத்துவிட்டது.  மதத்தை மட்டும் வைத்துக்கொண்டு கூச்சலிடும் யாரும் தயவுசெய்து இந்த கட்டுரையை தொடர்ந்து வாசிக்கவேண்டாம். உணர்வுள்ள மனிதர்கள் மட்டும் வாருங்கள் பேசலாம்.

Friday, January 4, 2013

இன அழிப்பு செய்யாதீர்! யாழ். வைத்தியர்களிடம் ஒரு கோரிக்கை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் பெரியோர்கள் கூறுவார்கள். ஆனால் இந்த அவசர உலகில் நோய் இல்லாத மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம் என்றே சொல்ல வேண்டும். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நோயின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். இரண்டு வயது குழந்தைக்கும் சலரோகம், புற்றுநோய் ஆட்கொண்டு அவர்களின் எதிர்காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறது. 


இலங்கையைப் பொறுத்தவரை வடமாகாணத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகம்.  இயற்கை காரணிகள் ஒரு பக்கம் இருக்க செயற்கையான கொடூர யுத்தம், அம்மக்களை மேலும் தலை தூக்க விடாமல் நோய் என்ற அரக்கனை அவர்களுக்கு பரிசளித்துள்ளது. நோயின் தாக்கத்தால் இங்குள்ள மக்கள் வெய்யிலில் தவிக்கும் புளுவாக ஒருபக்கம் நெளிய,  பெருந் திரளான நோயாளர்களுக்கு ஏற்ற மருத்துவ வசதிகள் அங்கு இல்லை என்பது அவர்களை மேலும் சுருட்டி விடுகிறது.