"ரிஸானா நபீக்" இன்றுடன் ஒரு கிழமையாக அனைவர் வாயிலும் உச்சரிக்கும் ஒரு
நாமமாக மாறிவிட்டது. ரிஸானா அவள் எம்மைவிட்டு மறைந்தாளும் அவளது இழப்புக் குறித்த பேச்சுக்கள்
இப்போதைக்கு மறையப் போவதில்லை. ரிஸானாவிற்கான தண்டனை குறித்து பெருமைகொள்ளும் ஒரு
கூட்டமும், கண்டனங்களை தெரிவிக்கும் மற்றுமொரு கூட்டமும் இன்றும் கூச்சலிட்டுக்
கொண்டே இருக்கின்றன.
இதுரை நான், எந்தவொரு மதம் குறித்தோ சமூகம், இனம் குறித்து பேசியதோ, முக்கியத்துவம் கொடுத்தோ இல்லை. ஆனாலும்
ரிஸானாவின் படுகொலை, அவளது முயற்சி மரணித்தமை என்னை கண்கலங்க வைத்துவிட்டது. மதத்தை மட்டும் வைத்துக்கொண்டு கூச்சலிடும்
யாரும் தயவுசெய்து இந்த கட்டுரையை தொடர்ந்து வாசிக்கவேண்டாம். உணர்வுள்ள மனிதர்கள்
மட்டும் வாருங்கள் பேசலாம்.