Saturday, April 21, 2012

வெளிநாடுகளில் நம்மவர்களின் தில்லு முள்ளுகள்

உலகின் எல்லா மூலைகளிலும் தன் பெயரை பதித்துள்ள இலங்கைத் தமிழன் தன் தனித்துவத்தையும் பதிக்காமல் இல்லை. கல்விக்குப் பெயர்போன யாழ் மண், யாழ்ப்பாணத்தான் இப்போது தனது பெயரை விசித்திரமாக பல சாதனைகளை புரிந்து பதித்துள்ளான். 


தழிழன் என்றொரு இனம் உண்டு. அதற்கு தனிச் சிறப்புண்டு என்று தமிழர்களை போற்றி தலையில் துக்கி வைத்துள்ளது இந்த உலகம். நல்ல செயல்களால் தன்னை அலங்கரித்துக் கொண்ட தமிழன், இப்போது உலகில் உள்ள கள்ள வேலைகள் அனைத்தையும் செய்து தன் இனத்தின் தனித்துவத்தை விற்று வருகிறான். 


வெளிநாடு சென்றுள்ள நம்மவர்கள் ஒருசிலர் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அங்கு நேர்மையாக முன்னுக்கு வரும் இளைஞர்கள் மத்தியில் பலர் பல்வேறுபட்ட பிழையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை மறுக்கமுடியாது. இவ்வளவு பில்டப்பையும் பாத்து கொடூரமா பதிவை வாசிச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல..............

Sunday, April 8, 2012

கொழும்பு பஸ்களில் ஆண்களின் அட்டகாசங்கள்


இலங்கையின் வியாபார நகரமாகிய கொழும்பில் வசிக்கும் பெரும்பாலானவர்களின் போக்குவரத்து சாதனம் பஸ்தான். 

இந்த பஸ்களில் பெண்கள் பிரயாணஞ் செய்வதென்றால் அப்பப்பா...... ஒரு நரக லோகம் தான். காலையிலும் மாலையிலும் வேலைக்கு போய்வரும் பெண்கள், பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகள் பஸ் பிரயாணத்தில் படும் பாடு கொஞ்ச நெஞ்சம் இல்லை.

காலையில் எழும்பி உற்சாகத்தோட வேலைக்கோ பாடசாலைக்கோ வெளிக்கிட்டு ஓடிப் போய் பஸ்ஸ பிடிச்சு ஒரு மாதிரி ஏறினா, அதில் வரும் அன்புச் சகோதரர்கள் இருக்கினம் பாருங்கோ நாய மாதிரி நாக்கில வீணீர் வடிய வடிய ஒரு பார்வை பாப்பினம்.



அதோட விடுவினமா சாரதி பிறேக் போட்டா என்ன போடாட்டி என்ன ஒரு ஆட்டம் ஆடுவினம். பிறகு எப்படா பாதசாரதிகள் கடவை வரும் சட்டெண சாரதி பிறேக் பிடிப்பார் என்று பாத்துக் கொண்டு இருப்பார்கள்.