Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts

Tuesday, October 2, 2012

சரித்திடம் படைக்கத் துடிக்கும் மொட்டுக்களை கருக்காதீர்கள்!

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இன்று சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினம் என்பது யாவரும் அறிந்த ஒன்று. எனினும் இவ் வயதினருக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி பலர் கருத்திற் கொள்வதில்லை. முக்கிய பெரும் சொத்துக்களின் தினமாக இன்றைய நாள் அமையப் பெற்றிருக்கிறது. இருப்பினும் இன்றைய சிறுவர்கள் எதிர்கால தலைவர்கள். எனவே சிறுவர்கள், அவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் குறித்து இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் பேசலாம். 



ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் நிறைவான மனிதன் எனும் கட்டிடத்தின் அஸ்திவாரமாக அவனது இளமைக்காலம் அமைகிறது. அந்தக் காலத்தில் அவன் பெறும் கல்வி, அனுபவம், சிந்தனைகள் எல்லாம் எதிர்கால அறுவடைக்காய் விதைக்கப் பெற்ற நாற்றுக்கள்.

Tuesday, May 22, 2012

புகுந்த வீட்டிற்கு அனுப்பவேண்டிய மகளை சுடுகாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்


அன்பு, பாசம், ஒழுக்கம், முயற்சி, நன்மை, தீமை என உலக வாழ்வின் அனைத்து அடிப்படை விடயங்ளையும் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் முதல் ஆசான்களாக பெற்றோர்கள் இருக்கவேண்டும். அது பெற்றோர்களின் கடமையும் கூட. சிலர் அவ்வாறு வாழ்கிறார்கள். சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சரியான வழியில் வழிநடத்த தவறுகின்றனர்.


பிள்ளைகள் சிலரின் தவறான முடிவுகளிற்கு அல்லது பிள்ளைகள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தூண்டுதல்களாக, காரணியாக பெற்றோர்களே இருப்பது கசப்பான உண்மையும் கூட. பெற்றோர்களின் தவறான செயற்பாடுகளால் பிள்ளைகளின் வாழ்க்கை, எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

Saturday, April 21, 2012

வெளிநாடுகளில் நம்மவர்களின் தில்லு முள்ளுகள்

உலகின் எல்லா மூலைகளிலும் தன் பெயரை பதித்துள்ள இலங்கைத் தமிழன் தன் தனித்துவத்தையும் பதிக்காமல் இல்லை. கல்விக்குப் பெயர்போன யாழ் மண், யாழ்ப்பாணத்தான் இப்போது தனது பெயரை விசித்திரமாக பல சாதனைகளை புரிந்து பதித்துள்ளான். 


தழிழன் என்றொரு இனம் உண்டு. அதற்கு தனிச் சிறப்புண்டு என்று தமிழர்களை போற்றி தலையில் துக்கி வைத்துள்ளது இந்த உலகம். நல்ல செயல்களால் தன்னை அலங்கரித்துக் கொண்ட தமிழன், இப்போது உலகில் உள்ள கள்ள வேலைகள் அனைத்தையும் செய்து தன் இனத்தின் தனித்துவத்தை விற்று வருகிறான். 


வெளிநாடு சென்றுள்ள நம்மவர்கள் ஒருசிலர் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அங்கு நேர்மையாக முன்னுக்கு வரும் இளைஞர்கள் மத்தியில் பலர் பல்வேறுபட்ட பிழையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை மறுக்கமுடியாது. இவ்வளவு பில்டப்பையும் பாத்து கொடூரமா பதிவை வாசிச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல..............

Tuesday, March 13, 2012

காரைநகரானின் திருமணத்தில் கோடிகள் படும் பாடு

யாழ் மாவட்டத்தின் தென்மேற்குத் திசையில் ஏழு தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சப்த தீவுகள் என கூறுவர். காரைநகர், வேலணை, புங்குடுதீவு, நெடுந்தீவு, அனலைதீவு, எழுவை தீவு, மண்டை தீவு என்பனவே இந்த சப்த தீவுகள். ஏனைய தீவுகளை விடவும் யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இருப்பது காரைநகர் ஆகும். காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடைய தீவு.



இங்கு அதிகமான காரைச் செடிகள் இருந்தமையின் காரணமாக காரைநககர் என பெயர் வந்ததாக கூறுவர். காரைநகர் வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகளைக் கொண்டுள்ளது.