Tuesday, March 13, 2012

காரைநகரானின் திருமணத்தில் கோடிகள் படும் பாடு

யாழ் மாவட்டத்தின் தென்மேற்குத் திசையில் ஏழு தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சப்த தீவுகள் என கூறுவர். காரைநகர், வேலணை, புங்குடுதீவு, நெடுந்தீவு, அனலைதீவு, எழுவை தீவு, மண்டை தீவு என்பனவே இந்த சப்த தீவுகள். ஏனைய தீவுகளை விடவும் யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இருப்பது காரைநகர் ஆகும். காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடைய தீவு.



இங்கு அதிகமான காரைச் செடிகள் இருந்தமையின் காரணமாக காரைநககர் என பெயர் வந்ததாக கூறுவர். காரைநகர் வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகளைக் கொண்டுள்ளது.