Tuesday, May 22, 2012

புகுந்த வீட்டிற்கு அனுப்பவேண்டிய மகளை சுடுகாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்


அன்பு, பாசம், ஒழுக்கம், முயற்சி, நன்மை, தீமை என உலக வாழ்வின் அனைத்து அடிப்படை விடயங்ளையும் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் முதல் ஆசான்களாக பெற்றோர்கள் இருக்கவேண்டும். அது பெற்றோர்களின் கடமையும் கூட. சிலர் அவ்வாறு வாழ்கிறார்கள். சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சரியான வழியில் வழிநடத்த தவறுகின்றனர்.


பிள்ளைகள் சிலரின் தவறான முடிவுகளிற்கு அல்லது பிள்ளைகள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தூண்டுதல்களாக, காரணியாக பெற்றோர்களே இருப்பது கசப்பான உண்மையும் கூட. பெற்றோர்களின் தவறான செயற்பாடுகளால் பிள்ளைகளின் வாழ்க்கை, எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.