Thursday, December 8, 2011

உறவுகளுக்காய் முதல் முதலில் விழித்தவை


புல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி 
நெல்லுக்கும் பொசியும் இந்த நவீன காலத்தில் 
பல நாடோடி சிற்பிகளால் செதுக்கப்பட்ட சிற்பமாய் 
என் மனம் அமைதி கொள்கின்றது 

அறிவு மட்டும் ஏனோ இவற்றை எல்லாம்
ஏற்க மறுக்கிறது – உன்
விழிகளில் விழுந்தவை - பல
விளக்குகளிற்கு ஒளியேற்றக் கூடியவை 
மனதை மடக்கி விட்டது – அறிவு


என் விழிகளில் வீழ்ந்த
என் சமூகத்திற்கு வளம் சேர்க்கும்
பசளைகளை இங்கே உரமேற்றுவதற்காய்
என் பயணம் தொடர்கிறது 









6 comments:

  1. வணக்கம்,

    வாருங்கள் தங்கள் வரவால் இலங்கை பெண்களின் வலைப்பக்கம் சிறப்புறட்டும்..

    ReplyDelete
  2. பதிவுலகில் முதன்முதலாய் அழகான கவியுடன் காலடி எடுத்து வைக்கும் தங்களை வருக வருகவென வரவேற்கிறேன்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோதரி! உங்கள் வருகை நல்வரவாகட்டும்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்ற நண்பர்களுக்கு நன்றிகள்.

    முதற்பதிவிட்டு நீண்ட நாட்களுக்குப் பின் இரண்டாவது பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியே.

    ReplyDelete