Monday, June 10, 2013

உயிர் இருக்க உடலை அரிக்கும் புற்றுநோய்: இலங்கை மக்களின் நிலை என்ன ?

யுவராஜ் சிங், ஆஞ்சலினாஜோலி, மனிஷா கொய்ராலா என கிரிக்கெட், சினிமா, உலக தலைவர்கள்  பிரபல்யங்களுக்கு புற்றுநோய் என்றதும் நாம் ஒருகணம் இனந்தெரியாத துன்பத்துக்குள் தள்ளப்படுகிறோம். விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம். ஆனால் எமது பக்கத்து வீட்டில், பக்கத்து தெருவில் என்று ஆறு மாத குழந்தை முதல் 60,70 வயது முதியவர் வரை புற்றுநோயினால் அரிக்கப்படுக் கொண்டிருக்கிறார்கள். வளர்ந்தவர்களை விடுங்கள், குழந்தைகள் செய்த பிழை, பாவம்தான் என்ன ? அவர்களுக்காக நாம் ஒரு நொடியை ஏனும் செலவழித்திருக்கிறோமா ?


மனித உடலையும், மனைதையும் புற்று புற்றாய் அரித்து அழிக்கும் புற்றுநோய், தலைமுதல் கால்வரை உடலின் எந்தப் பாகத்தையும் தாக்கக் கூடியது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.